தேடலின் சுகம், தேடியது கைக்கெட்டியதும் கிடைப்பதில்லை - அதற்காக தேடலோடு நின்றுவிட்டால், வாழ்க்கையின் அர்த்தம் வரையறைக்குள் வருவதில்லை. கைக்கெட்டிய தூரத்தில் எல்லாமிருந்தும் கையைக் கட்டியது - பாசம். தேடலை கைவிட்டேன் அன்று - ஆனால் மீண்டும் தொடர்கிறேன் இன்று - வேண்டுவது என்னவென்று தெரியாமலே! இது தேடலில் உள்ள சுகத்திற்காக அல்ல - நான் தொலைத்ததை மறப்பதற்காக. தொலந்து போன நீ - மற்றுமொரு தேடலில் அகப்பட்டு வெற்றி காணும் வரை, நான் இல்லாத ஒன்றை - தேடிக் கொண்டே இருப்பேன்.